காணாமற் போன பொறியியலாளரால் பரபரப்பு! கடிதம் மீட்பு!

மட்டக்களப்பு, கல்லடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

kaladi-300x187இந்தநிலையில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுமாறு வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு குறித்த பொறியியலாளர் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் கல்லடி பாலத்தில் இருந்து நேற்று பிற்பகல் குதித்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அப் பகுதியில் பெருமளவான மக்கள் இன்றும் குவிந்துள்ளனர்.

எனினும் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக வதந்திகளே பரவி வருதாகவும், இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.